""இது நான் பிறந்ததும் எழுதிய ஜாதகம்.''
""ஆச்சரியமா இருக்கே!.... நீ பிறந்த உடனே ஜாதகமெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டியா?''
- என்.பர்வதவர்த்தினி,
பம்மல், சென்னை - 600075.
""நான் டாக்டர் பட்டம் வெச்சிருக்கேன்!''
""அடேங்கப்பா!.... இந்த சின்ன வயசிலேயேவா?''
""அதில்லே,..... ஒரு பட்டம் வாங்கி அதிலே டாக்டர் படம் வரைஞ்சிருக்கேன்!''
கே . இந்து குமரப்பன்,
விழுப்புரம் - 605602.
""பாட்டி,.... உனக்கு பட்டாணி பிடிக்குமா?''
""பல்லே இல்லை....பட்டாணி எப்படிடா பிடிக்கும் ?''
""அப்ப இந்த பட்டாணிய பத்திரமா வெச்சுக்க.... விளையாடிட்டு வந்து
வாங்கிக்கிறேன் பாட்டி !''
அசோக்ராஜா,
திருச்சி - 620015
""எங்க வீட்டுக்குள்ளே நாலு ரூம் இருக்கு..... தோட்டத்திலே எழுபது ரூம் இருக்கு!''
""யம்மாடியோவ்!..... அப்படியா?''
""மஷ்ரூம்டா!...''
டீ.என்.பாலகிருஷ்ணன்,
சென்னை - 600091.
"".... உடம்பு "பெருக்கறது' கெடுதலாம்மா?''
""ஆமாம்!....''
""பின்னே ஏன் என்னைப் பெருக்கச் சொல்றே?''
அசோக்ராஜா,
திருச்சி- 620015.
""பாலில் இருந்து நமக்கு வேறு என்ன பொருளெல்லாம் கிடைக்கும்.... சொல்லுங்க!''
""காபி, டீ, பாதாம் பால், ஐஸ்க்ரீம், மில்க் ஷேக்.... சார்!''
ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி டவுன்.