மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் உள்ளது.
- ஷேக்ஸ்பியர்
உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதி தர இயலாது.
- எமர்சன்
ஆர்வமில்லாமல் இருக்கும் மாணவனிடம் கட்டாயப்படுத்தும் கல்வியறிவு மனதில் படியாது.
- பிளேட்டோ
ஆசைகளைத் திருப்தி செய்து கொண்டிருந்தால் அமைதி ஏற்படாது.
- ஹீபர்
அன்பு நிறைந்த இன்சொல், இரும்புக் கதவைக்கூடத் திறந்து விடும்.
- ஜான் கீட்ஸ்
பணி செய்து கொண்டிருப்பதன் மூலம் காலம் புனிதமாகிறது.
- பர்ரோன்
சீராகச் செலவு செய். பணத்தைச் சேமித்து வை., அதுவும் ஒருவித வருமானம்தான்.
- எட்மண்ட் பர்க்
உலகமே எனது நாடு. சேவையே எனது சமயம்.
- தாமஸ் பெய்ன்
துன்பம், தீமை, வறுமை இவை மூன்றும் உழைப்பால் விலகிவிடும்.
- வால்டேர்