அறத்துப்பால் - அதிகாரம் 47 - பாடல் 7
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
- திருக்குறள்
எந்தச் செயல் என்றாலும்
தொடங்கு முன்னே சிந்தனை செய்
பல தடவை சிந்தித்த பின்
பயன் தெரிந்து முடிவு செய்
செய்யத் துணிந்த பின்னாலே
எண்ணிப் பயன் இல்லையே
ஈடுபட்ட பின்னாலே
எண்ணுவதென்பது இழிவாகும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்