அளவுக்கு மீறி ஓய்வெடுக்காதே. காலம் அறிந்து கடமையாற்று.
நல்ல செயல்களை செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்.
தன் தவறுகளைத் தானே உணர்ந்து தன்னைத் தானே திருத்திக்கொள்பவன் சிறந்த மனிதனாவான்.
எந்தச் சூழ்நிலையிலும் மன அமைதியை இழக்க வேண்டாம்.
அரைகுறை அறிவு ஆபத்தை விளைவிக்கும்.
நற்பணிகளில் அர்ப்பணிப்பு இருந்தால் விளைவுகளில் பிரகாசம் ஏற்படும்!
கடவுளை ஆராய வேண்டாம். அன்பால் அவரை அடையலாம்.
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டு.
கடவுள் உன் உள்ளத்தில் குடியிருக்கிறார்.
அகந்தை பெருமையை உணர்கிறது. சமர்ப்பணம் சந்தோஷத்தை உணர்கிறது.