கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் சுவைக்குப் புகழ்பெற்ற பழம் ஒன்றின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...
1. மாணவர்களை இப்படியும் சொல்வர்...
2. வழிவழி வருபவர்கள்....
3. இளவரசிகள் இதில்தான் பயணிப்பார்கள்...
4. இசைக்கான குழல் அல்ல, புகைக்கான குழல்...
5. உப்பு வயல்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. மாணாக்கர்,
2. பரம்பரை,
3. பல்லக்கு,
4. ஊதுகுழல்,
5. உப்பளம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல்: மாம்பழம்