சிறுவர்மணி

பொன்மொழிகள்!

சஜி பிரபு மாறச்சன்

பெருந்தன்மை என்பது நற்குணங்களின் ஆபரணமாகும். 
- அரிஸ்டாட்டில்

நம் அறிவுத் திண்மையும், செயல்படும் திறனும் வளர்வது அன்பினாலேயே. 
- எமர்சன்

நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் செய்யப்பட்ட கலைவடிவங்களில் கூட  திறன்கள் மறைந்தே இருக்கும்.
 - ஓவிட்

இசையோ, சித்திரமோ, சிலையோ, வடிவமைப்போ எதுவாகிலும் சரி, கலை வடிவங்கள் ஆன்மிக அழகைப் புலப்படுத்துதே!  
-  சால்வடார்

ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உறவாடும் சங்கேத மொழியே கலையாகும்! 
- ஜான் ரஸ்கின்

பொருள் இருக்கும்வரை மண்ணுலகில் மதிப்பு. புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகத்தில் மதிப்பு. 
- பகவத் கீதை

நீங்கள் கடமையைச் செய்யும்போதே உங்கள் தகுதி தெரிந்துவிடும். 
- கதே

வீரனைவிட, கோழைதான் சச்சரவு நிறைந்தவனாக இருப்பான்.  
- ஜெஃபர்சன்

அன்பில்லாத மொழி வெறும் இரைச்சலே. 
- பைபிள்

மெழுகுவர்த்தி ஒளியைக் கொடுக்கிறது. நண்பர்களுக்கும்... பகைவர்களுக்கும்! 
- எட்னா செயின்ட் வின்சென்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT