""மனக் கணக்கு போட ஏன் இவ்வளவு நேரம் யோசிக்கிறே?''
""இது மனக் கணக்கா சார்? நான் மணிக்கணக்குன்னு நினைச்சிட்டேன்.''
- ஏ. நாகராஜன்,
பம்மல்.
""உங்கிட்டே என்சைக்ளோபீடியா இருக்கா?''
""உன் சைக்ளோபீடியால்லாம் இல்லியே...,என்சைக்ளோபீடியாதான் இருக்கு!''
கோ.சித்ரா,
கிருஷ்ணாபுரம்.
""நம்ம வாத்தியார் ஸ்கூலை விட்டு விலகியது ‘பேரி'ழப்புடா!''
""அப்போ, அந்த பேரை வேற யாருக்காவது வைச்சிருவோம்!''
இர.கிருத்திக்குமார்,
நெய்வேலி.
""எனக்கு சரித்திரப் பாடமே பிடிக்கலே சார்!''
""ஏன்?''
""அதிலே எதிர்காலமே இல்லையே சார்!''
உ/ர்,
கடையநல்லூர்.
""மன்னர்களுக்குப் பிடித்த கிழங்கு எது?''
""சேனைக் கிழங்கு!''
ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்,
திருநெல்வேலி டவுன்.
""நான் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலே போகாம நிதானமாத்தான் கார் ஓட்டுவேன்!''
""ஏன்?.... மணி கோச்சுப்பாரா?''
சி.ஆர்.ஹரிஹரன்,
அலுவா.