அநீதி இழைப்பவன், அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகமாகத் துயரம் அனுபவிப்பான்.
- பிளாட்டோ
பிறரைச சீர்திருத்தும் கடமையைவிட தன்னைச் சீர்திருத்துவதுவே முதற்கடமை. - பெர்னார்ட் ஷா
அன்பான செயல்களால் இதயங்கள் வசப்படும்.
- பர்லே
கண்பார்வை அற்றவன் குருடன் அல்லன்! தன் குற்றம், குறைகளை உணராதிருப்பவனே குருடன்.
- மகாத்மா காந்தி
உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பிடமாக இருக்கிறது.
- நபிகள்
முள்ளைத் திருப்பிக் கடிகாரத்தைச் சரிப்படுத்தலாம்! ஆனால் மனிதர்களின் மனதை அப்படி மாற்ற முடியாது.
- யாரோ
குழந்தைகளுக்கு நம்புவதற்கு கற்றுக் கொடுப்பதைவிட, சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள்.
- இங்கர்சால்
கோபத்தை விட்ட மனிதனுக்குத் துயரங்கள் ஏற்படுவதில்லை.
- வியாசர்
அரசன், ஆசிரியன், நண்பன், புத்திசாலி ஆகியவர்களோடு தர்க்கம் வேண்டாம்.
- சாணக்கிய நீதி
அகந்தை முன்னே செல்லும். அவமானம் பின் தொடரும்.
- சாலமன்.