சிறுவர்மணி

பெயர்ச்சொல்! வினைச்சொல்! ஒரே சொல்!

25th Feb 2020 11:36 AM

ADVERTISEMENT

 பசும்புல்லை மேய்ந்திடும் நன்றாய் "ஆடு!'' - தம்பி
 பள்ளி விழா மேடையில் அழகாய் "ஆடு!''
 வீட்டுக் கூரைக்கு வேய்வார் "ஓடு!'' தம்பி
 விரைவாய் ஓட்டப் போட்டியில் "ஓடு!''
 
 பறவைகள் மரத்தில் அமைக்கும் ""கூடு!'' - தம்பி
 பாசமாய் நண்பருடன் என்றும் ""கூடு!''
 அறத்தில் சிறந்தது நம் தமிழ் ""நாடு!'' - ஐயம்
 தீர்ந்திட என்றும் பெரியோரை ""நாடு!''
 
 வெயிலில் அலைந்திட்டால் உடல் பெறும் ""சூடு!'' - தம்பி
 வெற்றிக்கு மாலையை அணிவிப்பார்!....""சூடு!''
 உயர்ந்திட வாழ்க்கையில் படுவார்கள் ""பாடு!''
 உழைப்பைப் போற்றி நீ ஒரு பாடல் ""பாடு!''
 
 மழை வந்தால் தண்ணீரால் பெருகி ஓடும் "ஆறு!'' - மனம்
 துன்பத்தாலே வருத்தமுற்றால் சற்றே நீயும் "ஆறு!''
 பழங்களைக் குவியலாக வைத்திட்டால் அது ""கூறு!''
 அவை இனித்தவுடன் பாராட்டை நீ வாய் விட்டுக் ""கூறு!''
 
 கெங்கை பாலதா

ADVERTISEMENT
ADVERTISEMENT