மாரியம்மன் கோயிலிலே திருவிழா - அங்கே
முளைப்பாரி ஊர்வலமும் ஒரு விழா!
கோரிக்கையை மாரியிடம் கூறலாம்! - நம்
குலம் வாழ அருள்தரவே கோரலாம்!
பக்தரெல்லாம் ஆடிப்பாடி வருகிறார்! - தலையில்
பால்குடமும் தேன்குடமும் சுமக்கிறார்!
சக்தியிடம் வேண்டுதலை வைப்போமே - நம்
சங்கடங்கள் தீர்த்தருளத் துதிப்போமே!
கோயிலிலே வழிபாடும் நடக்குது! - அங்கே
குடம்குடமா பால் வழிந்து கொட்டுது!
தேவியவள் சாந்தமாகி அருள்கிறாள்! - கண்ட
தரிசனத்தால் மக்களெல்லாம் மகிழ்கிறார்!
ஆண்டு தோறும் வருகுது பார் குதூகலம்! - மக்கள்
ஆடிப்பாடி மகிழ்ச்சியிலே கும்மாளம்!
வேண்டும் வரம் தருபவள்தான் மாரியம்மா! - நம்
வேதனைகள் தீர்த்திடுவாள் முத்து மாரியம்மா!
ADVERTISEMENT