கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அரசர்கள் வாழும் இடத்தைக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். இப்போதே விடை தெரிந்து விட்டது என்கிறீர்களா? கட்டங்களை நிரப்ப ஆரம்பியுங்கள்...
1. கைகட்டி வாய் பொத்தி நிற்பதற்குப் பெயர்...
2. ஊரிலும் நடக்கும் உள்ளத்துக்குள்ளேயும் நடக்கும்...
3. மணமக்களை ........... வாழ வாழ்த்துவார்கள்....
4. இதற்கு இருபுறமும் எப்போதும் அடி கிடைக்கும்...
5. இந்த மரம் முழுவதும் மக்களுக்குப் பயன்படும்...
கட்டங்களில் வரும் சொற்கள்
1. அடக்கம்,
2. கலவரம்,
3. பல்லாண்டு,
4. மத்தளம்,
5. பனைமரம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : அரண்மனை