பண்புடைமை
பொருட்பால் - அதிகாரம் 100 - பாடல் 6
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
- திருக்குறள்
நல்ல குணம் உள்ளவர்கள்
நன்மை செய்யும் இனியவர்கள்
பூமியிலே இருப்பதனால்
இன்னும் உலகம் வாழ்கிறது
இல்லையென்றால் இவ்வுலகம்
இன்னும் உயிர் வாழாது
மண்ணோடு மண்ணாகி
ஒழிந்து போய்விடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்