1. உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லு வான்...
2. எங்கம்மா பிள்ளைத்சாச்சி, எங்கப்பன் சுவர் ஏறிக் குதிப்பான்...
3. பச்சைக்கீரை சமையலுக்கு உதவாது... வழுக்க உதவும்...
4. சிவப்பானவன் எரிவான், கருப்பானவன் தெரிவான்...
5. கால் நான்கு நடக்காது, கண் ஆயிரம் இமைக்காது...
6. ஆடி ஆடி நடப்பான் அமைதியாக அதிர வைப்பான்...
7. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது...
8. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை...
விடைகள்:
1. எதிரொலி
2. பூசணிக்காயும் கொடியும்
3. பாசி
4. நெருப்பு புகை
5. நார்க்கட்டில்
6. யானை
7. செருப்பு
8. மழை
-ரொசிட்டா