குறள் பாட்டு: ஆள்வினை உடைமை

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்.
குறள் பாட்டு: ஆள்வினை உடைமை

பொருட்பால்   -   அதிகாரம்  62   -   பாடல்  6


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்திவிடும்.

- திருக்குறள்

முயன்று முயன்று உழைப்பதால்
செல்வம் பெருகி வளர்ந்திடும்
முயற்சியின்றிச் சோம்பலால்
இருந்தால் வறுமை வந்திடும்.

இடைவிடாது முயல்வதால்
எல்லாம் வளம் ஆகிடும்
சோம்பலாக இருப்பதால்
வறுமையில் கொண்டு தள்ளிடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com