முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்திவிடும்.
- திருக்குறள்
முயன்று முயன்று உழைப்பதால்
செல்வம் பெருகி வளர்ந்திடும்
முயற்சியின்றிச் சோம்பலால்
இருந்தால் வறுமை வந்திடும்.
இடைவிடாது முயல்வதால்
எல்லாம் வளம் ஆகிடும்
சோம்பலாக இருப்பதால்
வறுமையில் கொண்டு தள்ளிடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்