1. விரித்து வைத்தால் நம்மைப் பாதுகாப்பான், மடக்கி வைத்தால் பைக்குள் அடங்கிப் போவான்...
2. தட்டினால் பறப்பவன் சிக்கினால் உயிர் விடுவான்...
3. வாசலிலே இட்ட ஓவியம், காற்றால் கலைந்த ஓவியம்...
4. அடங்கித்தான் இருப்பான், கோபம் வந்தால் பொங்கி எழுவான்...
5. இந்தக் கொம்பு வளைந்த கொம்பு, வெள்ளை நிறத்தில் பளபளக்கும் கொம்பு...
6. பரந்து விரிந்தவன் நேரத்துக்கொரு வண்ணம் காட்டுகி றான்...
7. மழையிலே விளைந்த குடை, மழைக்கு உதவாத குடை...
8. அழகு வண்ண சேலைக்காரி... இவள் ஆடினால் மழை வரும்...
விடைகள்
1. குடை, 2. கொசு, 3. கோலம்,
4. தீ, 5. யானையின் தந்தம்,
6. வானம், 7. காளான், 8. மயில்
- ரொசிட்டா