1. காய் காய்த்தும் பழம் பழுக்காத மரம்...
2. குண்டுகுழி ராசாவுக்குக் குடல் எல்லாம் பல்...
3. இரவும் பகலும் ஓய்வில்லை, இவன் படுத்தால் எழுப்ப ஆளில்லை...
4. இரண்டு தோட்டம் நான்கு வேலி, பூ பூத்தால் பூந்தோட் டம் பாழ்...
5. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்க முடியாத நீர்...
6. வளைக்க முடியும், ஒடிக்க முடியாது...
7. கூடவே வருவான் ஆனாலும் ஒரு உதவியும் செய்ய மாட்டான்...
8. சின்னப்பெட்டிக்குள் கீதங்கள் ஆயிரம், ஆயிரம்...
விடைகள்:
1. முருங்கை மரம், 2. மாதுளம்பழம்
3. இதயம், 4. கண்கள்
5. கண்ணீர், 6. தலை முடி
7. நிழல், 8. ஆர்மோனியப் பெட்டி