""பைலட் எதுக்கு கோயிலுக்குப் போறார்?''
""தெரியலையே,.... நீயே சொல்லு!....''
""கோயிலில்தான் "விமானம்' இருக்கே!...''
-சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை.
""பாம்பு கடிச்சா அந்த இடத்திலே கீறி விட்டு சுத்தம் பண்ணுவாங்க...''
""அந்த நேரத்திலே கீரிப்பிள்ளைக்கு எங்கே போவாங்க?....''
வி.ரேவதி, எம்.சி. ரோடு, தஞ்சாவூர்.
""நான்தான் உன்னை மிதிச்சதுக்கு
சாரி சொல்லிட்டேனே....நீ ஏண்டா என்ன மிதிக்கிறே?''
""சாரிடா!...''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
""நேத்து நடந்த ஓவியக் கண்காட்சியிலே உங்க ஓவியம்தான் பார்க்கறாமாதிரி இருந்தது!..''
""ரொம்ப தேங்ஸூங்க...''
""மற்ற ஓவியங்களைச் சுற்று ஒரே கூட்டம்!.... பார்க்கவே முடியலே!''
கே.கவின், பொள்ளாச்சி - 642004.
""ஸ்கூட்டின்னா என்ன?...''
"" ஸ்கூட்டரோட பெண்பாலா இருக்கும்!...''
உ.அலிமா பீவி, கடையநல்லூர் - 527751.
""அட!...உங்க அக்கா சமையல் கத்துக்கறாங்களா?... என்ன சமையல்?''
""ஃபேஸ் புக் சாம்பார்!.... வாட்ஸ் அப் ரசம்!...''
எம.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.