தேங்காய் உடைக்கும்பொழுது கிடைக்கும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்:
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர்ப் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் தொற்றுகளை அழிக்கும்.
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் குடித்துவந்தால், தைராய்டு சுரப்பியைச் சீராகச் செயல்பட வழிவகுக்கும்
செரிமான பிரச்னை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாள்கள் குடித்துவந்தால், குணம் பெறலாம். தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், வாய்வுத் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்பு சேராது. இதனை குடித்தால், பசி கட்டுப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
தினமும் காலையில் ஒரு கிண்ணம் தேங்காய் தண்ணீர் குடித்தால், ,உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
தினமும் ஒரு கிண்ணம் தேங்காய் தண்ணீர் குடித்துவந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்துவந்தால், கர்ப்பக் காலத்தில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.