அரிசி உப்புமா செய்யும்போது, வெந்த காராமணியை கொஞ்சம் கலந்து அடையாகத் தட்டி இட்லி தட்டில் வேக வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, ஊற வைத்த பச்சரிசியுடன் ஒரு மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல், ஒரு மேசைக்கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால் மிருதுவாக இருக்கும்.
சீடை செய்யும்போது, அது வெடிக்காமல் இருக்க , சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போடுங்கள்.
சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது பட்டாணி பருப்பு என்று கேட்டு வாங்கி அதை ஊறவிட்டு அரைத்து, வடை செய்தால் ஆறினாலும் மொறுமொறுப்பாக இருக்கும்.
தேன் குழல் செய்யும்போது வெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பிசைந்து செய்தால், வாசனையாக இருக்கும்.
ரஸ்குத் தூளை மிக்ஸியில் பொடி செய்து பால், சர்க்கரை, நெய் சேர்த்து கிளறினால் அல்வா தயார்.