தேவையான பொருள்கள்:
கடலை மாவு- 1 கிண்ணம்
பச்சரிசி- 1 கிண்ணம்
நெய்- 5 மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
புதினா- சிறிதளவு
சீரகம்- 1 மேசைக்கரண்டி
தனியாத் தூள்- 2 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள்- இரண்டரை மேசைக்
கரண்டி
கரம் மசாலா- இரண்டரை மேசைக் கரண்டி
சீரகத் தூள்- இரண்டு மேசைக் கரண்டி
மஞ்சள் தூள், ஓமம்- அரை மேசைக்கரண்டி
செய்முறை:
கடலை மாவு, உப்பு, ஓமம், 1 தேக்கரண்டி மிளகாய் எள், 1 மேசைக்கரண்டி கரம் மசாலா, சீரகத்தூள், 2 தேக்கரண்டி நெய், தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். இதை உருண்டைகளாக்கி, ஆவியில் 7 நிமிடம் வைக்கவும், வாணலியில் நெய், சீரகம், புதினா தாளிக்கவும். மீதமுள்ள பொடிகள், உப்பு, வெந்த உருண்டைகள், 2 கிண்ணம் தண்ணீர் விட்டு அரிசி சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.