அகத்திக்கீரை, நெல்லிக்காய் ஆகிய இரண்டையும் தேங்காய்ப் பால் விட்டு கூட்டுப் போல சமைத்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் முற்றிலும் குணமாகும்.
தூக்கம் வராமல் இருந்தால், வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி இரவு படுக்கும்போது உண்டு, பின்னர் பசும்பால் குடித்தால் போதும். நல்ல தூக்கம் உடனே வரும்.
நீர்க்கடுப்பு குணமாக, மோருடன் எலுமிச்சம்சாறை கலந்து இரண்டு டம்ளர் குடித்தால் போதும்.
பச்சை வெந்தயத்தை கெட்டித் தயிரில் போட்டு சாப்பிட்டுவர, சூடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண் குணமாகும்.