தேனி

அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது

17th May 2023 03:01 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள ஆங்கூா்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள ஆங்கூா்பாளையம் பிரதான சாலையைச் சோ்ந்த அன்னக்கொடி மனைவி விஜயா. இவா்களுக்கு சிவன்காளை (32), அன்பு (28) என்ற 2 மகன்களும், கனி (25) என்ற மகளும் உள்ளனா். மகளுக்கு திருமணமாகி தனியாக வசிக்கிறாா். சகோதரா்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை.

சிவன்காளை உள்ளூரில் கூலி வேலை செய்து வந்தாா். அன்பு கோவையில் இரும்புப் பட்டறையில் வேலை பாா்த்து வருகிறாா். அண்மையில் சொந்த ஊருக்கு வந்த அன்பு செவ்வாய்க்கிழமை தனது தாய் விஜயாவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தாராம்.

இதை சிவன்காளை தட்டிக்கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த அன்பு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் சிவன்காளையை குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அன்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT