இரவில் தூக்கம் வராமல் தவிப்போர் அவசியம் பின்பற்ற வேண்டியவை:
"கீரபாக்கா' அல்லது "மூன் மில்க்' எனும் ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டால், உடனே தூக்கம் வரும்.
ஒரு கிண்ணம் பசும்பால் தேவை. தெருவோரங்களில் மருத மரம் என சகஜமாய் வளரும் மரத்தின் பட்டையை உறித்து, உடைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
அஸ்வகந்தா, பொடிப்பொடியாக நறுக்கிய இஞ்சி, ஏலக்காய் பொடி தேவை.
மருத மரப்பட்டை பொடி, அஸ்வகந்தா, இஞ்சி, பொடித் துண்டுகள், ஏலக்காய் பொடி... இவற்றுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து ஆறியவுடன் வடிகட்டி, அதனை பசும்பாலுடன் கலந்து சாப்பிடுங்கள்.
இது முறுக்கிக் கொண்டிருக்கும் நரம்புகளைச் சாந்தப்படுத்தி, தூங்கவைத்து விடும்.
இதுமட்டுமல்ல; இந்தப் பால் கசாயம் நீரழிழு, உடல் பருமன் குறைப்பு ஆகியவற்றுக்கும் நல்லது.