ஏதாவது ஒரு பருப்பை பொடி செய்து மஞ்சள், எலுமிச்சை சாறு, பால் கலந்து உடம்பில் காய வைத்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.
தயிருடன் சிறிது அரிசி மாவு கலந்து இரவு முகத்தில் பூசி, காலையில் கழுவினால் முகத்தில் உள்ள மாசு, மரு நீங்கும்.
தோலில் கரும்புள்ளி இருந்தால் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கி, தேய்தால் புள்ளிகள் மறைந்துவிடும்.
எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் ஆகியவற்றை வெயிலில் காய வைத்து பொடியாக்கி, பாலுடன் கலந்து முகத்தில் பூசினால் முகம் பளிச்சிடும்.