மோர் நிறைய அருந்த தாகம் தணிவதுடன் உடல் சூடு, வயிற்று வலி ஏற்படாமல் பாதுகாக்கும்.
தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, கொஞ்சம் காசிக் கட்டியைக் கலந்து ஆறியதும் குடித்து வர சிறுநீரகத் தொற்று நோய்கள் வராது.
வெள்ளரிச் சாறில் மாதுளம் பழத் தோல் பொடியைக் கலந்து அருந்த நீர்க்கடுப்பு சரியாகும்.
செங்கோடு வேலி என்ற மூலிகை மருந்தை பாலுடன் கலந்து தினமும் குடிக்கலாம்.
வேனல் கட்டிகள் இருந்தால் அதன் மேல் வெள்ளைச் சந்தனமும், மஞ்சளும் கலந்து பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.
காலையில் பேரீச்சம்பழம், கிஸ்மிஸ், பொடித்த கசகசா மூன்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க "சன் ஸ்ட்ரோக்' வராது.
குறுமிளகு, வெட்டிவேர், கிஸ்மிஸ், கற்கண்டு ஆகியவற்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தால் அதிக உடல் சூடு தணியும்.