தேவையான பொருள்கள்:
உளுந்து வேக வைத்த தண்ணீர்- 100 மி.லி.
சீரகப் பொடி- அரை தேக்கரண்டி
வெள்ளை மிளகுப் பொடி- அரை தேக்கறண்டி
துளசி இலை-ஒரு கைப்பிடி அளவு
நெய்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை;
பாத்திரத்தில் ஒரு நெய் தேக்கரண்டி விட்டு சூடானவுடன் சீரகப் பொடி அரை தேக்கரண்டி சேர்த்து, பின்னர் தண்ணீர் ஒரு கப் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். அதில் வெள்ளை மிளகுப் பொடி அரை தேக்கரண்டி, ஒரு கைப்பிடி துளசி இலை சேர்த்து சூடான சூப்பை பரிமாறவும். இருமல், காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.