மகளிர்மணி

டபேதாராக முதன் முறையாக பெண்!

பாரத்

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் டபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்களுக்கு நிகராக,  பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர்.   
1862-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில், "டபேதார்'  எனும் பதவியில் பெண்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.
நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து நீதிமன்ற அறைக்கும், சேம்பரில் இருந்து வீட்டுக்கு செல்ல காருக்குச் செல்லும்போதும் உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் வருவதை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நீதிபதிக்கு முன்பு கையில் செங்கோல் ஏந்தி நடந்து செல்வர்.  இவர்கள் வெள்ளை நிற ஆடையும்,  தேசிய சின்னம் அணிந்த சிவப்பு நிற தலைப்பாகையும்,  உடலின் குறிக்கே சிவப்புப் பட்டை அணிந்து,  செங்லோலை ஏந்தி, வழிவிடும்படி ஒலி எழுப்பிக் கொண்டே நீதிபதிகளுக்கு முன்னர் செல்வர். காலை முதல் மாலை வரை நீதிபதி இருக்கும் இடத்திலேயே இருப்பர்.
இந்தப்  பதவிக்கு முதன் முறையாக திலானி என்ற பெண் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவின் சேம்பரில் பணியாற்றி வருகிறார்.  உதவியாளர் பணிக்கு தேர்வாகி பணியாற்றி வந்தவரை தனக்கு டபேதாராக நியமிக்கும்படி நீதிபதி கேட்டுப் பெற்றதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல்,  தமிழக சட்டப் பேரவையில் பேரவைத் தலைவருக்கு உதவியாக இருக்கும் "துபாஷ்'  என்ற பணிக்கு ராஜலட்சுமி என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT