நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம். இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்து செல்லும் (பழக்கங்கள் மாறாததால்) அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றத்துக்கு வழிவகுக்கும். கீழ்கண்ட சிலவற்றைத் தவிர்த்தால், குடும்பத்தின் நிதிநிலைமை காப்பதுடன், அமைதியும் கூடும்.
குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பதைக் குறைத்தல், கார், வாகனங்களைக் குறைந்த விலையில் வாங்குதல், வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்தல், சீரழிந்த வாழ்க்கை முறையைத் தவிர்ப்பது மருத்துவச் செலவுகளைக் குறைக்கும், பிரமாண்ட திருமணங்கள், குடும்ப விழாக்களைத் தவிர்த்தல், தேவையின்றி கடன் வாங்குவதைத் தவிர்த்தல், கிரெடிட் கார்டில் செலவழிப்பதைத் தவிர்த்தல், வீடு, அலுவலகத்தின் உள்புறங்களில் செலவழிப்பதைக் குறைப்பது போன்றவையாகும்.