மகளிர்மணி

பேரீச்சம் பழப் பொங்கல்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பச்சரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு  - 100 கிராம் 
வெல்லம் - 300 கிராம்
தேன் - 25  கிராம்
பேரீச்சம்பழம் - 10
சுக்குத்தூள் - 1 தேக்கரண்டி
நெய்  - 50 கிராம்
ஏலக்காய்த்தூள்  -  1 தேக்கரண்டி
பால்  - 100 மில்லி

செய்முறை:   

பேரீச்சம் பழத்தைப்  பொடியாக  நறுக்க  வேண்டும்.  அரிசி,  பருப்பை ஒன்றாகக் களைந்து  வைக்க வேண்டும்.  ஒரு பாத்திரத்தில்  தேவையான தண்ணீர்விட்டு அடுப்பில்  வைத்து கொதித்ததும்  அரிசி,  பருப்பைச் சேர்த்து  வேக வைக்க வேண்டும்.  பாதி வெந்ததும் பால் சேர்த்து  இன்னும்  குழையவிட  வேண்டும். வெல்லத்தை  கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து  கரையவிட்டு  கொதித்ததும் வடிகட்டி வெந்த பொங்கலில்  சேர்க்க வேண்டும்.  அத்துடன் தேன்,  பொடியாக  நறுக்கிய பேரீச்சம்பழம் சேர்த்து  நன்றாக  கிளறி  சேர்ந்தாற் போல் வந்ததும்  நெய், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து கிளறி இறக்க  வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT