மகளிர்மணி

உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடலாமா? 

ப. வண்டார்குழலி


இதயத்திலிருந்து உடலின் பல பாகங்களுக்கும், அங்கிருந்து இதயத்துக்கும் ரத்த நாளங்களின் வழியே பாயும் ரத்தத்தின் அழுத்தமே ஒருவரின் ரத்த அழுத்தமாக அளக்கப்படுகிறது. இதயத்திலிருந்து ரத்தம் வெளியில் பாய்ச்சப்படும்போது, அதிக அழுத்தத்துடன் சுருங்கிய நிலை diastolic எனவும், வெளியிலிருந்து இதயத்திற்கு ரத்தம் வரும்போதும் ஏற்படும் தளர்வான அல்லது குறைவான அழுத்தத்துடன் விரிவடைந்த நிலை க்ண்ஹள்ற்ர்ப்ண்ஸ்ரீ எனவும் கணக்கிடப்படுகிறது. எவ்வித நோயும் இல்லாத நிலையில், சாதாரணமான ரத்த அழுத்தம் என்பது  21 - 25 வயதுள்ளவர்களுக்கு 120.5/78.5mm/Hgயும், 36 - 40 வயதினருக்கு 120.5/75.5 mm/Hgயும் இருக்க வேண்டும். இந்த அளவைவிட அதிகமாகும்போது உயர் ரத்த அழுத்தமாகவும், குறையும்போது குறை ரத்த அழுத்தமாகவும் கருதப்படுகிறது. 

குறை ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் இதயம் தொடர்பான நோய்கள், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, நாட்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, பேறுகாலம், ரத்தசோகை, கல்லீரல் தொடர்பான நோய்கள், முதுமையில் ஏற்படும் நோய்கள், நீண்டகால மருந்துகள் போன்றவை குறை ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இவை தற்காலிகமாக அல்லது அடிக்கடி ஏற்பட்டாலும் பெரும்பாலானோருக்கு நிரந்தமான பிரச்னையாகவே இருந்துவிடுகிறது. மற்றொரு வகையிலும் குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. சிறு குழந்தை, இளம் வயதினர், கர்ப்பிணிகள் திடீரென்று மயக்கம் போட்டு விழுவதென்பது ஒழுங்காக உணவு எடுத்துக்கொள்ளாத நிலையில், போதுமான ரத்தம் இல்லாமல், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நிகழ்வதாகும். இந்நேரத்திலும் அவர்களுக்குக் குறை ரத்த அழுத்தம் இருக்கும் என்றாலும் இது தற்காலிகமாக ஏற்படுவதாகும். இருப்பினும், அலட்சியப்படுத்தாமல் காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சைத் தேவையெனில் அதனையும் எடுத்துக்கொண்டு, தொடர்ந்து முறையான உணவை சரியான நேரத்திற்குக் கடைபிடிக்க வேண்டும். 

குறை ரத்த அழுத்த நிலையின் அறிகுறிகள் உடலின் ரத்த அழுத்தம் குறையும்போது, மயக்கம் ஏற்படுவது பொதுவான ஒரு அறிகுறி என்றாலும், மங்கலான கண் பார்வை, உடல் மிதப்பது போன்ற உணர்வு, குமட்டல், வாந்தி, கை கால் நடுக்கம், தலைவலி, கவனமின்மை என்று அனைத்தும் சேர்ந்த அறிகுறியாகவே உணர்த்தப்படுகிறது. உடனடியாகக் கவனம் செலுத்தப்படவில்லையெனில், குழப்பமான மனநிலை, அளவுக்கு அதிகமான குளிர், வெளிரிய தோல், ஆழமில்லாத அதே சமயம் விரைவான சுவாசம், பலகீனமான நாடித்துடிப்பு என்று நிலை தீவிரமாகி, உயிருக்கே ஆபத்தான நிலையும் ஏற்படலாம். 

குறை ரத்த அழுத்தத்திற்கும் உப்புக்கும் உள்ள தொடர்பு ஒரு நபர் ஒருநாளைக்கு 5 கிராம் உப்புதான் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று  உலக சுகாதார நிறுவனம் வரைமுறை கொடுத்துள்ளது. அதற்கும் அதிகமாக இருந்தால், அது அதிக உப்பு எடுத்துக்கொள்ளும் நிலையில்தான் வருகிறது. ரத்த அழுத்தத்திற்கும் உப்பின் அளவுக்கும் உள்ள தொடர்பு இன்றளவும் ஆய்வுகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறது. என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது, உடலின் நீரின் அளவும் அதிகரிப்பதால், ரத்த நாளங்களில் பாயும் ரத்தமும் அதன் அழுத்தமும் அதிகரிக்கிறது என்பதே பெரும்பான்மையாகக் கருதப்படும் உடலியங்கியல் நிகழ்வாகும். இதுவே, உடலில் போதுமான உப்பு இல்லாதபோது, ரத்த நாளங்களில் ஓடும்   ரத்தத்தின் அழுத்தம் குறைந்து பாயும் திறனும் குறைந்து, உடலின் உறுப்புகளுக்குக் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜனும் சரியாகக் கிடைக்காத நிலையில்தான் சோர்வும் மயக்கமும் ஏற்படுகிறது. 

உப்பிற்கும் சோடியத்திற்கும் உள்ள வேறுபாடு உப்பு என்றாலும் சோடியம் குளோரைடு என்றாலும் ஒன்றுதான் என நினைக்கத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றல்ல. தூள் உப்பு என்பதன் வேதியியல் பெயர்தான் இயற்கையிலேயே கிடைக்கும் சோடியம் குளோரைடு என்பது. இது ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே. அதாவது, 40% சோடியம், 60% குளோரைடு சேர்ந்தது. ஆனால்; சோடியம் என்பது உப்பில் காணப்படும் ஒரு தாது. ஒருவரின் ரத்தத்தில் சோடியம் அளவு 135 முதல் 145 ம்உவ்/ப்என்றிருக்க வேண்டும். இதற்குக் குறைவாக இருந்தால், குறை ரத்த அழுத்தமும் ஏற்பட்டு மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படலாம். உணவில் சேர்க்கும் உப்பு குறைந்தாலும், இந்த ரத்த சோடியம் அளவு குறையுமென்பதால் தீவிர நிலையில் குறை ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த சோடியம் அளவு இருப்பபவர்களுக்கு, அவசர சிகிச்சையாக ஊசி மூலமாகவே உப்புக் கரைசல் நீர் செலுத்தப்படுகிறது. இந்த சோடியம் மிக விரைவாக உடலால் உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால், ஒருவரின் உடல் நிலை நோயுடன் இருந்தாலும் உறுப்புகளின் செயல்பாடுகள் சரியாக இருந்து, எப்போதாவது மட்டுமே குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டால், உணவுமுறை மாற்றத்தின் வழியாகவே அதை சரிசெய்து கொள்ளலாம். 

உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடலாமா?

உப்பு சேர்த்து உலர்த்தும் கருவாடு, ஊறுகாய் வகைக, அஜினோமோட்டோ சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைக் குறை ரத்த அழுத்தம் உள்ள நபருக்குத் தொடர்ச்சியாகக்  கொடுக்கும் பழக்கமும் தவிர்க்கப்பட வேண்டும். இப்பொருள்களில் சேர்க்கப்படும் உப்பு தேவையான அளவுக்கு அதிகமாகவே இருப்பதால், தொடர்ச்சியாக சாப்பிடும்போது, அவர்களுக்குத் தெரியாமலேயே ரத்த சோடியம் அளவு நேரடியாக சட்டென்று அதிகரித்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், சிறுநீரக ரத்த நாளங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படும். மேலும், நாம் உபயோகிக்கும் தூள் உப்பினைப் பக்குவப்படுத்தும்போது (processing, refining) வெகுநாட்களுக்குக் கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காகவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காகவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்பனேட் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருட்களெல்லாம் உப்புக்கு நல்லதே தவிர உடலுக்கு அல்ல. எனவே, உப்பு சேர்த்தாலும் கடற்பகுதியில் விளைந்த சுத்தம் செய்யப்பட்ட கல் உப்பு பரிந்துரைக்கப்பட்ட அளவில் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது. 

குறை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இயற்கையாகவே உப்பின் அல்லது சோடியம் அளவு அதிகமாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கும் கீரைகளை, காய்களை, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வகையில், சோளம், கடலை, துவரை, அரைக்கீரை, பசலை, முள்ளங்கி, பலா, பலாக்கொட்டை, தாமரைத்தண்டுவற்றல் (இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது), முலாம் பழம், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை, கொத்துமல்லித்தழை போன்றவை குறை ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்ல பலனைக்கொடுக்கும். இவையனைத்தும் சோடியத்துடன் சேர்த்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களையும் உடலால் உட்கிரகிக்கப்படும் அளவிற்கே கொடுக்கின்றன. அதே நேரம் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், ரத்தசோகையாலும் குறை ரத்த அழுத்தம் இருக்கும் நிலையில், அந்த நபரின் வயதுக்கும் பணிக்கும் ஏற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட சத்துக்களைக்   கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். 

புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். மீன், முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள், ஆட்டிறைச்சி, பாதாம் உள்ளடக்கிய கொட்டை வகைகள், அடர்பச்சை கீரைகள், பருப்பு போன்றவை ரத்த விருத்தி கொடுத்து, உடலின் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைப்பதற்கு உதவிசெய்கின்றன. இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் சரிசெய்யப்பட்டு, போதுமான ஆக்ஸிஜன் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் கிடைக்கப் பெற்று குறை ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் நீங்குவதுடன் உடலும் ஆரோக்கியம் பெறும்.   

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT