குஜராத் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளதையடுத்து ராஜ்கோட்டில் உள்ள கிராமம் ஒன்று அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்குத் தடை விதித்துள்ளது.
மேலும் அரசியல் கட்சிகள் பேனர் வைக்கவும், துண்டுப் பிரசுரம் விநியோகிக்கவும் இங்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமும் உள்ளது. ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.