மகளிர்மணி

தவலை அடை

29th Sep 2021 06:00 AM | - எம்.எஸ். லட்சுமிவாணி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

பச்சரிசி - ஒரு கிண்ணம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
கடுகு - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: 

ADVERTISEMENT

பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும். ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT