மகளிர்மணி

கதம்ப சுண்டல்

6th Oct 2021 06:00 AM | - ஏ.காந்தி, செய்யாறு.

ADVERTISEMENT

 

தேவையானவை:

வெள்ளை காராமணி -  கால் கிண்ணம்
வேர்க்கடலை - அரை கிண்ணம்
இனிப்புச்சோளம் -  கால் கிண்ணம் 
(உதிர்த்தது)
தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க:
கடலைப்பருப்பு - 2  தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி 
வரமிளகாய் - 3
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1  தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை -  1 ஈர்க்கு
பெருங்காயம் -  அரை தேக்கரண்டி

செய்முறை: 

ADVERTISEMENT

காராமணி, வேர்க்கடலை இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேகவிட்டு தனியே வைக்கவும். உதிர்த்த இனிப்புச் சோளத்தை சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட்டுத் தனியே வைக்கவும். வாணலியில் 1  தேக்கரண்டி  எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த காராமணி, வேர்க்கடலை, சோளம் இவற்றைச் சேர்த்து வதக்கி பொடித்த பொடியினைத்தூவி, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT