கறிவேப்பிலையை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு தினமும் ஒரு டம்ளர் நீரில் அரை தேக்கரண்டி கலந்து குடித்து வர முடி நன்றாக வளரும்.
* மஞ்சள் தூள் சோற்றுக் கற்றாழை இரண்டையும் அரைத்து முகத்தில் பூசி வர முகப்பரு மறைந்து முகம் பொலிவு பெறும்.
* பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.
* பப்பாளி இலைச்சாறை உடலில் படர் தாமரை உள்ள இடத்தில் காலை, மாலை தொடர்ந்து ஒரு வாரம் வரை தடவி வர படர்தாமரை மறைந்துவிடும்.
* எலுமிச்சைச் சாறில் சிறிது உப்பைக் கலந்து தலையில் நன்கு தடவி 15-20 நிமிடங்கள் ஊறிய பின்னர் அலசினால் பொடுகு மறையும். முடி உதிர்வையும் தடுக்கும்.
* கொஞ்சம் தேன், மஞ்சள் தூள், பன்னீர் கலந்து காலை, மாலை முகத்தில் பூசிப் பத்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
* உருளைக்கிழங்குச் சாறு, தக்காளிச் சாறு, பப்பாளிச்சாறு மூன்றையும் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.