மகளிர்மணி

வசம்பின் மருத்துவ குணங்கள்!

நெ. இராமன்

வசம்பின் வேர்,  தண்டு,  இலை, பூ ஆகியவை மருந்தாகும்.  வயிற்றுப் போக்கு நீக்கும்.

இருமல்,  நரம்பு தளர்ச்சி,  வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு.

வெட்டு காயங்களின் மீது வசம்புத் தூளை  வைத்து கட்டினால்  குணமாகும்.

வசம்பை சுட்டுத் தூளாக்கி  சுக்குத் தூளுடன்  கலந்து  வயிற்றின் மேல் பகுதியில் பூசினால்  வயிறு உப்புசம்  குணமாகும்.

வசம்பு தாள்களை  சிறுசிறு  துண்டாக்கி  நீரில்  போட்டு அரைமணி நேரம் கழித்து  குளித்தால்  குழந்தைகளுக்கு  தோல்நோய்  வராது.

வசம்புத் தூளை தேனில்  குழைத்து  குழந்தைக்கு  கொடுத்தால்  காய்ச்சல்  குணமாகும்.

வசம்பு   பித்தப்பை, சிறுநீர்ப்பை  கற்களை  கரைக்கும் தன்மை உடையது.

அரை தேக்கரண்டி  வசம்பு தூளுடன்  பனங்கற்கண்டு  சேர்த்து  உண்டு வர  நரம்பு தளர்ச்சி  குணமாகும்.

வெந்நீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை  கலந்து  கிருமி நாசினியாகவும்  பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT