குப்பைமேனி, கீரை வகையைச் சார்ந்தது. இதை மூலிகையாகவும் மருத்துவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்களும் உள்ளன. இதனை பூனைவணங்கி என்றும் சொல்வது உண்டு.
குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து அதனை சருமத்தின் மீது தடவி ஒரு மணி நேரம் சென்றதும், கழுவி வந்தால் தோளில் ஏற்படும் நோய்கள் குணமாகும். இதனை தொடர்ந்து 15 நாள்கள் செய்து வரவேண்டும்.
அதுபோன்று குப்பைமேனி இலையுடன் உப்பு வைத்து கசக்கினால் கிடைக்கும் சாற்றை தொண்டை மீது போட்டால் தொண்டை வலி குணமாகும்.
குப்பைமேனி இலையை சுத்தம் செய்து நிழலில் காயவைத்து பொடியாக்கி, தினமும் இரு தடவைகள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்னைகள் குணமாகும்.
குப்பைமேனி வேரை தண்ணீரில் நன்கு அலசி பிறகு அதை கொஞ்சம் நல்ல தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வர வயிற்றிலிருக்கும் புழுக்கள் வெளியேறும். குப்பைமேனி ஒரு சிறந்த கிருமி நாசினி.