"கறுப்பு வைரம்' என்றும் "குடியுரிமையின் தாய்' என்றும் போற்றப்படும் ரோஸா பார்க்ஸ் கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் பாடுபட்ட முதல் பெண்மணி. பேருந்தில் வெள்ளையருக்கு இடம் அளிக்க மறுத்ததற்காக நீதிமன்ற வழக்கைச் சந்தித்தவர். வழக்கு விசாரணைக்கு வந்த டிசம்பர் 5-ஆம் நாள் மார்டின் லூதர்கிங் போன்றவர்களின் அறைகூவலால் கறுப்பின மக்கள் பேருந்துப் புறக்கணிப்புப் செய்து 381 நாள்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
பின்னர், உயர்நீதிமன்ற தீர்ப்பினால் கறுப்பின மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாளான பிப்ரவரி 4-ஆம் தேதியை கலிஃபோர்னியா, மிஸிஸிசிப்பி ஆகிய மாநிலங்களிலும். டிசம்பர் முதலாம் நாளை ஓகையோ, ஓரிகான் ஆகிய மாநிலங்களிலும் ரோஸா பார்க்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
(பானுமதி தருமராசன் எழுதிய "வரலாறு படைத்த வைரமங்கையர்'நூலிலிருந்து)