இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று முடி உதிர்வும், பொடுகு தொல்லையும், இந்த பிரச்னைகளில் இருந்து இயற்கையாக விடுபட என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்:
திரிபலா சூரணம், தயிர், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும்.
2 தேக்கரண்டி திரிபலா சூரணம், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், அரை தேக்கரண்டி வேப்ப எண்ணெய் இம்மூன்றையும் தயிரைச் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், தலையில் அனைத்து இடங்களிலும் படும்படி இந்த பேஸ்டை நன்றாக பூச செய்யவேண்டும். உங்களது முடியை பகுதி பகுதியாக பிரித்து நன்றாக மண்டையோட்டில் படும்படி தேய்க்கவேண்டும்.
30 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் பின்பு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்து கொள்ளலாம்.
வாரத்தில் மூன்று நாள்கள் இதைச் செய்து வந்தால் போதும்.
நிச்சயமாக தலையில் இருக்கும் அரிப்பு, பொடுகு, பேன், முடி உதிர்வு எந்த பிரச்னையாக இருந்தாலும் அது படிப்படியாக குறையத் தொடங்கும்.