தேவையானவை:
கடலை பருப்பு - அரை கிண்ணம்
உளுந்தம் பருப்பு - 1 கிண்ணம்
சிகப்பு மிளகாய் - 4
வெங்காயம் - 1
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
செய்முறை:
கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 3 மணிநேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பின்னர், மிக்சியில் உப்பு, மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு ஊற வைத்த பருப்பை சேர்த்து, ஒரு சுற்று சுற்றவிடவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) . பின்னர், கொர கொரப்பாக அரைத்த பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து கலக்கவும். சூடான எண்ணெய்யில் வடைகளாக பொரிக்கவும். இருபுறமும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும். பருப்பு வடை தயார்.
(குறிப்பு: வெங்காயம் சேர்க்காமலும் இந்த வடையை செய்யலாம்).