மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!

ஸ்ரீ


கதையோடு ஒன்றிவிடுவேன்!


நீண்ட இடைவெளிக்கு பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கண்ணான கண்ணே' தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியிருக்கிறார் ப்ரீத்தி சஞ்சீவ். இது குறித்து ப்ரீத்தி பகிர்ந்து கொண்டவை:

ஏன் இந்த இடைவெளி?

"பொம்மலாட்டம்' தொடரில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தேன். மகன் பிறந்ததும். இரண்டு குழந்தைகளையும் அம்மாவை பார்த்துக் கொள்ள சொல்லி கஷ்டப்படுத்தக் கூடாது என்பதால் சின்னதா பிரேக் எடுத்துக் கொள்ள நினைத்தேன். ஆனால், அது நீண்ட இடைவெளியாகிவிட்டது.

வீட்டில் இருந்தபோதும் சும்மா இருக்க பிடிக்காமல், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் சமையல் குறிப்புகள், ஆன்மிக தகவல்கள் போன்றவற்றை பதிவிட்டு வந்தேன். அதற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையில் குழந்தைகள் ஓரளவு வளர்ந்துவிட்டதால், நல்ல ரோல் வந்தால் மீண்டும் நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அது இப்போது "கண்ணான கண்ணே' தொடர் மூலம் அமைந்திருக்கிறது.

மீண்டும் உங்களை திரையில் பார்க்கும்போது எப்படி இருந்தது?

நான் நடிக்காமல் இருந்தபோது, என்னை பார்ப்பவர்கள் பலரும் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதுதான் உண்மையில் எனக்கு திரும்பவும் நடிக்க வேண்டும் என்ற உந்துதலை தந்தது. இப்போது என்னை மீண்டும் திரையில் பார்த்துவிட்டு நண்பர்கள், ரசிகர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வில்லியாக உங்கள் கதாபாத்திரம் குறித்து...

யாருமே பிறக்கும்போதே வில்லியாக பிறப்பதில்லை. ஒவ்வொரு வில்லிக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கும். அப்படி தான் எனது கதாபாத்திரத்துக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். இந்த கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை நம்பி இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்தான் என் நன்றியை சொல்லணும்.

ரசிகர்களின் வரவேற்பு..

உண்மை சொல்ல வேண்டும் என்றால், முன்பு நான் லீட் ரோலில் நடித்தபோது கூட இவ்வளவு வரவேற்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு தற்போது ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை நானே எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயம், இன்னும் அதிகமாக இவர்களுக்காக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

"கண்ணான கண்ணே' தொடர் குறித்து..

இப்போது என் கதாபாத்திரம் அவ்வளவாக கதையோட ஒட்டாமல் தனியாக இருப்பது போன்று தோன்றினாலும் விரைவில் என் கேரக்டர் முழுசா கதையோடு ஒன்றிவிடும். அதில் எல்லாவிதமான மோல்டும் என் கேரக்டரில் பார்க்கலாம். நானும் அதையெல்லாம் பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT