தேவையானவை:
கொள்ளு பருப்பு - கால்கிலோ
வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொள்ளு பருப்பை ஆறு மணி நேரம் ஊற வைத்து எடுத்து, கிரைண்டரிலிட்டு கரகரப்பாக அரைத்து எடுத்து வைக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு இவைகளை இட்டு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவு கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப் பிடித்து, வடைகளாகத் தட்டி நன்கு காய்ந்த எண்ணெய்யிலிட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். கொள்ளுவடை தயார்.