மகளிர்மணி

பவளமல்லியின் மருத்துவ குணங்கள்!

லட்சுமி வாணி


எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகளில், பவளமல்லியும் ஒன்று. உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளைக் கொண்ட பவளமல்லி சொரசொரப்பான இலைகளைக் கொண்டது. கொத்தானப் பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும், பூக்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை கொண்டது.

வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்கக் கூடியது. வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்கக் கூடியதாக பயன்படுகிறது.

காய்ச்சலுக்கான மருந்து தயாரிக்கும் முறை

செய்முறை: பவளமல்லி இலைகள் 5 எடுத்து சுத்தம் செய்துவிட்டு 1 டம்ளர் நீர்விட்டு சிறிது இஞ்சி தட்டிப் போடவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வந்தால், சிக்கன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும். சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கும் முறை

பவளமல்லி இலைகள் 5 எடுத்து நன்றாக சுத்தப்படுத்திவிட்டு 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் தேனுக்கு பதிலாக சீரகம் அல்லது மிளகு சேர்க்கலாம். இந்த தேநீரை காலை, மாலை என 50 மல்லி அளவுக்கு குடித்து வர மூட்டு வலி குணமாகும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT