புடலங்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய் கூட்டு செய்யும்போது ஒரு தேக்கரண்டி பால் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
சூடான தோசைக் கல்லில் சிறிது புளித்த மோரும், உப்பும் தடவித் தேய்த்தால் பிசுபிசுப்பு இருக்காது.
வாங்கி வந்தவுடன் காம்பை கிள்ளிவிட்டால் பச்சை மிளகாய் அழுகாமல் இருக்கும்.
தேன்குழல் மாவுடன் வேக வைத்த உருளையை மசித்துச் சேர்த்து பிசைந்து செய்தால் கரகரப்புடன் இருக்கும்.
சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பத்து விநாடி மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடாக்கினால் மென்மையாகிவிடும்.