முகநூலின் இந்தியப் பதிப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர். முகநூலில் இந்தியப் பதிப்பின் முதல் ஊழியரும், முகநூல் இந்தியாவில் பெரும் வளர்ச்சி பெறக் காரணமானவர்களில் இவரும் ஒருவர்.
சென்னையில் பிறந்த கிருத்திகா ரெட்டி.
அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.வும், சைரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்தவர்.
2011- இல் ஃபார்ச்சூன் இந்தியாவின் தலைசிறந்த ஐம்பது சக்தி படைத்த பெண்களின் பட்டியலில் இடம் பெற்றவர். சாஃப்ட் பேன் அமைப்பின் முதல் பெண் முதலீட்டுப் பங்குதாரராக விளங்குகிறார்.