ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்னைகளை அதிகம் ஏற்படுத்தும். அடிவயிற்றில் வலி, பிடிப்புகள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கிவிடும்.
* ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்னையை ஏற்படுத்தும்.
* ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும், ஆகவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.
* கடைகளில் விற்கும் ஊறுகாயில் பதப்படுத்தும் ரசாயணங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும், இல்லாவிட்டால் மோசமான பின் விளைவுகளை
சந்திக்கக் கூடும்.
* ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
* ஊறுகாயில் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்திவிடும், இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.