தமிழில் முதன்முறையாக "உன் காதல் அறிந்தால்' என்ற படத்தில் நடிக்கும் கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா, அண்மையில் ராய்ச்சூரில் காணாமற்போன என்ஜினீயரிங் மாணவி மது , பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டுமென்று மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். "நம்முடைய வாழ்க்கையில் சமூக அக்கறையும் தேவை'' என்று கூறும் ஹர்ஷிகா, நடிப்பதோடு சமூக பிரச்னைகள் குறித்தும் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது முதல் படம் வெளியாவதற்கு முன்பே மற்றொரு தமிழ் படத்திலும் நடிக்க ஹர்ஷிகா ஒப்பந்தமாகியுள்ளார்.