சமையல் டிப்ஸ்!

தயிர் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வரை புளிக்காமல் இருக்க தேங்காய்த் துண்டுகளைப் போட்டு வைக்க வேண்டும்.
சமையல் டிப்ஸ்!

✦ தயிர் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வரை புளிக்காமல் இருக்க தேங்காய்த் துண்டுகளைப் போட்டு வைக்க வேண்டும்.
 ✦ ரசம் செய்யும்போது சுண்டைக்காய் அளவு இஞ்சி சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.
 ✦ மோர்க் குழம்பு செய்யும் போது அரிநெல்லிக்காய்களை அரைத்துப் போட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
 ✦ ஆப்பத்துக்கும், இடியாப்பத்துக்கும் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட பால் எடுக்கும் போது, அதனுடன் ஏலக்காய்ச் சேர்த்து அரைத்தால் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
 ✦ சப்பாத்தி மாவு பிசையும் போது, சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்தாலும், பாலாடைக் கட்டி சேர்த்துப் பிசைந்தாலும், வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக வரும்.
 ✦ வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யும்போது, சிறிதளவு கடலை மாவு மற்றும் தயிர் ஊற்றிப் பிசைந்தால் சுவையாக இருக்கும்.
 ✦ உப்பு நீர்த்துப் போகாமல் இருக்க உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டு வைத்தால் உப்பு நீர்த்துப் போகாமல் இருக்கும்.
 ✦ மிளகாய்ப் பொடியில் வண்டு வராமல் இருக்க, துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டி மிளகாய்பொடி டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.
 ✦ பிரிட்ஜில் வைக்கப்படும் பிரெட் துண்டுகள் விரைப்பாவதைத் தவிர்க்க, அத்துடன் உருளைக் கிழங்கை போட்டு வைப்பது நல்லது.
 ✦ தேங்காய்ச் சட்னி அரைக்கும் போது, பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
 - ஏ.எஸ். கோவிந்தராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com