கண்களுக்கு மையிடும்போது கவனிக்க வேண்டியவை...

கண்கள் மூக்கின் மேல் பகுதியில் அமையப் பெற்றவர்கள் மூக்கின் அருகே அமையுமாறு மைக்கோடுகளை இட வேண்டும்.
கண்களுக்கு மையிடும்போது கவனிக்க வேண்டியவை...

✦ கண்கள் மூக்கின் மேல் பகுதியில் அமையப் பெற்றவர்கள் மூக்கின் அருகே அமையுமாறு மைக்கோடுகளை இட வேண்டும்.
 ✦ கண்கள் புருவத்திலிருந்து சற்றே அதிகமாகக் கீழே இருக்கக் கூடியவர்கள், மைக் கோட்டை புருவப் பகுதியில் ஓரளவு தடிப்பாக இழுக்க வேண்டியது அவசியம்.
 ✦ கண்களுக்கு மைத்தீட்டுவது எல்லாப் பெண்களுக்கும் அழகாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மை தீட்டாமல் இயல்பாக அழகிய கண்களைக் கொண்டவர்கள் மை தீட்டுவதைத் தவிர்ப்பதே நல்லது.
 ✦ மைக்குப் பதிலாக மை பென்சில்களைப் பயன்படுத்தலாம். அவ்வாறு பென்சில்களால் மைதீட்டுவது ஓரளவுக்கு மெல்லியதாகவே இருக்கும்.
 ✦ கண்களில் மையிட, கண்ட கண்ட குச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. இதனால் கண்களுக்குப் பாதிப்பு நேரும். குச்சிகள் சிராய்த்து ஏதேனும் சிறு காயங்களை அல்லது கீறல்களை ஏற்படுத்திவிடவும் கூடும். எனவே இதற்கென உள்ள மெல்லிய பிரஷ்களைப் பயன்படுத்துவதே மிகமிக நல்லது.
 ✦ கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன் கண்களை நன்றாகக் கழுவித் துடைத்தப் பிறகே மை தீட்டத் தொடங்க வேண்டும். என்பதையும் மறந்துவீடாதீர்கள். மேலும் தினமும் ஒரே மாதிரி மை தீட்டுவதை விடுத்து அன்றன்று உடுத்தும் உடையின் நிறத்திற்கேற்ப அடிக்கடி மாற்றித் தீட்டிக் கொள்வதும் வரவேற்கத்தக்க முயற்சியாகும்.
 (பெண்களுக்குப் பயனுள்ள பல்வேறு குறிப்புகள் என்னும் நூலிலிருந்து)
 - முக்கிமலை நஞ்சன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com