முன்னாள் பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா - ஷோபா கபூரின் மகளும் நாட்டின் முன்னணி டி.வி.தொடர் தயாரிப்பாளருமான ஏக்தா கபூர் (43) வாடகை தாய் மூலம் ஆண் குழந்தையொன்றுக்கு தாயாகியுள்ளார். தனிமை தாயாக விரும்பி தானே குழந்தை பெற முயற்சித்து தோல்வியடையவே வாடகை தாய் மூலம் இப்போது தாயாகிவுள்ளார். ஏற்கெனவே இவரது சகோதரர் துஷார் கபூர் மூன்றாண்டுகளுக்கு முன்பே வாடகை தாய் மூலம் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். அவரவர் விருப்பப்படி வாரிசுகளை தேடி கொண்ட ஏக்தா கபூர் மற்றும் துஷார் கபூர் இருவருக்குமே திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.