1997-ஆம் ஆண்டு ரிஷிகேஷ் முகர்ஜி மற்றும் பாலிவுட் பிரபலங்கள் சேர்ந்து துவங்கிய மும்பை அகாதெமி ஆப் மூவிஸ் இமேஜ் என்ற லாபம் கருதாத பொதுநல அறக்கட்டளை தலைவராக இருந்த கிரண்ராவ் பட தயாரிப்பு காரணமாக பதவி விலகியதால் புதிய தலைவராக தீபிகா படுகோன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். "இந்த அறக்கட்டளை சார்பில் மும்பையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்படவிழா நடத்துவதுண்டு. கடந்த ஆண்டு 20-ஆவது ஆண்டு திரைப்படவிழா நடந்ததுபோல், இந்த ஆண்டும் அக்போடபர் 17 முதல் 24-ஆம் தேதி வரை திரைப்படவிழா நடக்குமென தீபிகா படுகோன் அறிவித்திருக்கிறார்.